குமாரசாமி பேச்சு
ராமர் பற்றியும் ராமர் பாலம் குறித்தும் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். மாண்டியாவில் ஆதிசுஞ்சுனகிரி மடத்தை சேர்ந்த ஷ்ரீ பாலகங்காதர சுவாமியின் பட்டாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், குமாரசாமி கலந்து பேசுகையில், மூத்த கட்சி அரசியல் தலைவரும் மாநில முதல்வர் பதவியை வகிக்கும் கருணாநிதி இது போன்ற கருத்துக்களை (ராமர் பற்றிய விமர்சனம்) தெரிவிப்பதை தவிர்த்திருக்கலாம். அவருடைய கருத்துக்கள் சமுதாயத்தில் ஏராளமானோரின் உணர்வை புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன் இரண்டு மூன்று தடவை யோசித்து இருக்க வேண்டும். மத சம்மந்தமான விவகாரங்களை அரசியல் மேடைகளில் பேசுவது தவறு. இது பல்வேறு சமுதாயத்தினரிடையே தவறான கருத்தை உருவாக்கி விடும்.
கடவுளின் மறு அவதாரம் ராமர் - கவுடா
"கடவுளின் மறு அவதாரம் தான் ராமர்; கற்பனை கடவுள் அல்ல" என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா (போன வாரம்) பெங்களூரில் நிருபர்களிடம் "என்னை பொறுத் தவரையில் ராமர் என்பது கற்பனை அல்ல. அவர் கடவுளின் மறு அவதாரம். இதற்கு சான்றாக பல ஆதாரங்கள் உள்ளன. இந்த பிரச்னையை சாதாரணமாக பேசிவிடக் கூடாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் அல்லது சீக்கியம் ஆகிய அனைத்து மதங் களிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. மத வழிபாட்டு கூடங்கள் பலவற்றுக்கு சென்று வழி பட்டுள்ளேன்"
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 25, 2007
கருணாநிதி பேச்சு - குமாரசாமி கருத்து
Posted by IdlyVadai at 9/25/2007 11:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment