ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை திடீரென தில்லி சென்று உடனேயே திரும்பி வந்தார்.
மதியம் விமானம் மூலம் தில்லி சென்ற அவர், இரவு விமானத்தில் சென்னைக்குத் திரும்பி வந்தார்.
தில்லியில் பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமரின் அலுவலகத்தில் அவர் கேட்டிருந்ததாகத் தெரிகிறது. இருந்தபோதிலும், பிரதமரை அவர் சந்திக்கவில்லை.
மற்றபடி காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தாரா என்பது பற்றியும் தெரியவில்லை. தங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தில்லியில் யாரைச் சந்தித்தார், எதற்காக தில்லி வந்தார் என்று தங்களுக்குத் தெரியாது என்று தில்லியில் ம.தி.மு.க. எம்.பி. ஒருவரே தெரிவித்தார்.
அந்த அளவுக்கு வைகோவின் தில்லி பயணம் இன்று காலை வரை ரகசியமாக இருந்தது.
இன்று மத்தியம் வந்த செய்தி இவ்வாறு இருக்கிறது.
திமுக, மதிமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. எதிர்பார்ப்பதைவிட ஓரிரு தொகுதிகள் குறைவாகத் தர திமுக முன்வந்துள்ளதால் மதிமுகவுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தலையிடக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்திக்க வைகோ வெளிளிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் இப்பிரச்சினையில் காங்கிரஸ் தலைமை தலையிட விரும்பாததால் வெள்ளி இரவே வைகோ சென்னை திரும்பினார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, February 25, 2006
வைகோ தில்லி பயணம் பின்னனி
Posted by IdlyVadai at 2/25/2006 06:52:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment